மத்தேயு – 18
1. அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து என்ன கேட்டார் கள்? பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
2. இயேசு யாரைத் தம்மிடத்தில் அழைத்தார்? இயேசு ஒரு பிள்ளையைத் தம் மிடத்தில் அழைத்தார். இயேசு யாரை அவர்கள் நடுவே நிறுத்தினார்? இயேசு ஒரு பிள்ளையை அவர்கள் நடுவே நிறுத்தினார்.
3. நீங்கள் யாரைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ் யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்.
4. பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பவன் யார்? இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
5. என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் யார்? இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகி றான்.
6. யாருடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்? என்னிடத்தில் விசுவாச மாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
7. இடறல்களினிமித்தம் யாருக்கு ஐயோ? இடறல்களினிமித்தம் உலகத் துக்கு ஐயோ. எது வருவது அவசியம்? இடறல்கள் வருவது அவசியம். இடறல் வருகிறதால் யாருக்கு ஐயோ? எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
8. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்ய வேண்டும்? அதைத் தறித்து எறிந்துபோட வேண்டும். நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினி யிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப் பது உனக்கு நலமாயிருக்கும்? சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
9. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்ய வேண் டும்? அதைப் பிடுங்கி எறிந்துபோட வேண்டும். இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், எப்படி ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்? ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
10. யாரை அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயி ருக்க வேண்டும். யார் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போ தும் தரிசிக்கிறார்கள்? இந்தச் சிறியர்களுக்குரிய தேவதூதர்கள்.
11. கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தது யார்? மனுஷகுமாரன்.
12. ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போ னால், சிதறிப் போனதைத் தேடாமலிருப்பானா? தேடாமலிருக்க மாட்டான். மற்றத் தொண்ணுணுணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படு வதைப் பார்க்கிலும் என்ன செய்வான்? காணாமல் போன ஒரு ஆட்டின் நிமித் தம் கவலைப்படுவான்.
13. சிதறிப்போன ஆட்டைக் கண்டுபிடித்தால் என்ன செய்வான்? சிதறிப்போ காத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுவதைப்பார்க் கிலும், கண்டுபிடித்த அந்த ஆட்டைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படு வான்.
14. இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது யாரு டைய சித்தமல்ல? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
15. உன் சகோதரன் உனக்கு. விரோதமாகக் குற்றஞ்செய்தால் அவனை என்ன செய்ய வேண்டும்? உன் சகோதரன் உனக்கு. விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும். உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த உன் சகோதரனை நீ எப்பொழுது ஆதாயப்படுத்திக் கொள்வாய்? உனக்கு விரோதமா கக் குற்றஞ்செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொடுத்தால் உன் சகோத ரனை ஆதாயப்படுத்திக் கொள்வாய்.
16. உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொ டாமல் போனால் என்ன செய்ய வேண்டும்? உனக்கு விரோதமாகக் குற்றஞ் செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொடாமல் போனால் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால் என்ன செய்ய வேண் டும்? அதைச் சபைக்குத் தெரியப்படுத்து. சபைக்கும் செவிகொடாதிருப்பானா னால் அவன் யாரைப்போல் இருப்பான்? அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பான்.
18. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் எங்கேயும் கட்டப்பட்டிருக்கும்? பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் எங்கேயும் கட்டவிழ்க் கப்பட்டிருக்கும்? பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
19. உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரி யத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், யாரால் அது அவர்களுக்கு உண்டாகும்? பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்.
20. இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக் கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிது யார் என்கிறார்? அங்கே அவர்கள் நடுவிலே நான் இருக்கிறேன் என்கிறார்.
21. அப்பொழுது பேதுரு இயேசுவினிடத்தில் வந்து என்ன கேட்டான்? ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
22. அதற்கு இயேசு எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
23. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
24. ராஜா கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, எத்தனை தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்? பதினாயிரம் தாலந்து.
25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் எப்படி கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்? அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26. அப்பொழுது அந்த ஊழியக்காரன் என்ன செய்தான்? அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கினான். அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி ராஜாவிடம் என்ன சொன்னான்? ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையா யிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் என்ன செய்தான்? அந்த ஊழியக் காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத் தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்கா ரரில் ஒருவனைக் கண்டு என்ன செய்தான்? அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து என்ன செய்தான்? என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல் அவனுடைய உடன் வேலைக்காரனை என்ன செய்தான்? அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
30. நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு என்ன ஆனார்கள்? மிகவும் துக்கப்பட்டார்கள்.
31. நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, என்ன செய்தார்கள்? ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித் தார்கள்.
32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து எதனால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன் என்றான்? நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன் என்றான்.
33. யாரைப்போல நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொன்னான்? நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொன்னான்.
34. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் என்ன செய் தான்? அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை என்ன செய்ய வேண்டும்? மன்னிக்கவேண்டும். எப்பொழுது என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்? நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்ப+ர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
No comments:
Post a Comment