மத்தேயு – 19
1. இயேசு இந்த வசனங்களை எங்கே சொன்னார்? கலிலேயாவில் சொன் னார். இயேசு கலிலேயாவை விட்டு எங்கே வந்தார்? இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2. இயேசுவுக்குப் பின்சென்றவர்கள் யார்? திரளான ஜனங்கள். இயேசு அவ்வி டத்தில் என்ன செய்தார்? இயேசு அவ்விடத்தில் திரளான ஜனங்களைச் சொஸ் தமாக்கினார்.
3. பரிசேயர் இயேசுவை என்ன செய்யவேண்டுமென்று அவரிடத்தில் வந்தார்கள்? பரிசேயர் இயேசுவை சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்தார்கள். பரிசேயர் இயேசுவிடத்தில் என்ன கேட்டார்கள்? புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
4. ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை எப்படி உண்டாக்கி னார்? ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணு மாக உண்டாக்கினார்.
5. எதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்? ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப் பான். எவர் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்? புருஷனும் மனைவியு மாகிய இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
6. யார் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்? தேவன். ஏன்? அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறபடியினால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.
7. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று கட்டளையிட்டது யார்? மோசே. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்று இயேசுவிடம் கேட்டது யார்? பரிசேயர்.
8. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து உங்கள் மனைவியைத் தள்ளிவிடலா மென்று மோசே ஏன் உங்களுக்கு இடங்கொடுத்தார் என்று இயேசு சொல்லுகி றார்? உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத் தார் என்று இயேசு சொல்லுகிறார். எதுமுதலாய் அப்படியிருக்கவில்லை? ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9. ஒருவன் எப்பொழுது விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்? எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயி ருப்பான். தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் யாராயிருப் பான்? விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.
10. அதற்கு சீஷர்கள் இயேசுவிடம் சொன்னதென்ன? மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11. அதற்கு இயேசு, யாரைத் தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள் ளமாட்டார்கள் என்றார்? வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வச னத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.
12. எதிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு? தாயின் வயிற்றி லிருந்து. யாரால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு? மனுஷர்களால். எதினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு? பரலோக ராஜ்யத்தினிமித்தம். எதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக் கொள் ளக்கடவன் என்று இயேசு சொன்னார்? தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்க ளாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர் களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன் என்றார்.
13. அப்பொழுது யார்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? சிறு பிள்ளைகளின்மேல். சிறு பிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் என்ன செய்தார்கள்? அதட்டினார்கள்.
14. இயேசு யார் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் என்றார்? சிறு பிள்ளைகள். யாரைத் தடைபண்ணாதிருங்கள் என்றார்? சிறு பிள்ளைகளைத் தடைபண்ணாதிருங்கள் என்றார். பரலோகராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடை யது என்று சொன்னார்? சிறு பிள்ளைகள்.
15. இயேசு யார் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போனார்? சிறு பிள்ளைகள் மேல்.
16. ஒருவன் வந்து நல்ல போதகரே என்று யாரை நோக்கிச் சொன்னார்? இயே சுவை நோக்கிச் சொன்னான். எதை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான்? நித்திய ஜீவனை அடைவதற்கு.
17. நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? என்றது யார்? இயேசு. யார் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என்று இயேசு சொன்னார்? தேவன்.
18. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் எவைகளைக் கைக்கொள் என்று இயேசு சொன்னார்? கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் இயேசுவை நோக்கி என்ன கேட்டான்? எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு எவை களையெல்லாம் செய்யாதிருப்பாயாக என்றார்? கொலை செய்யாதிருப்பா யாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக என்றார். இயேசு என்ன சொல்லாதிருப்பாயாக என்றார்? பொய்ச்சாட்சி சொல்லாதிருப் பாயாக என்றார்.
19. யாரை கனம்பண்ணுவாயாக என்றார்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றார். யாரிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனி டத்திலும் அன்புகூருவாயாக என்றார்? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்றார்.
20. அந்த வாலிபன் இயேசுவை நோக்கி சொன்னதென்ன? இவைகளையெல் லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21. அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய் என்ன செய்ய வேண்டும் என்றார்? நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும். எப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்? உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்.
22. அந்த வாலிபன் ஏன் இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்த வனாய்ப் போய்விட்டான்? அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த படியினால் இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23. ஐசுவரியவான் எதில் பிரவேசிப்பது அரிது? பரலோகராஜ்யத்தில் பிரவேசிப் பது அரிது.
24. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், எது எளிதாய் இருக்கும்? ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாய் இருக்கும்.
25. சீஷர்கள் அதைக்கேட்டு என்ன ஆனார்கள்? மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு இயேசுவிடம் என்ன கேட்டார் கள்? அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும்.
26. இயேசு அவர்களைப் பார்த்து இது யாரால் கூடாததுதான் என்றார்? மனுஷ ரால். இயேசு யாராலே எல்லாம கூடும் என்றார்? தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27. பேதுரு இயேசுவிடம் என்ன கேட்டான்? இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28. எந்தக் காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காச னத்தின்மேல் வீற்றிருப்பார்? மனுஜென்ம காலத்திலே. இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பவர்கள் யார்? மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற் றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க் கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பார்கள்.
29. நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளு கிறவன் யார்? என் நாமத்தினிமித்தம் வீ;டடையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையா வது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.
30. முந்தினோர் அநேகர் யாராயிருப்பார்கள்? பிந்தினோராயிருப்பார்கள். பிந்தி னோர் அநேகர் யராயிருப்பார்கள்? முந்தினோராயிருப்பார்கள்.
No comments:
Post a Comment