Monday, April 13, 2015

மத்தேயு – 21

மத்தேயு – 21
1. அவர்கள் எதற்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள்? எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள். பெத்பகேயு எங்கே உள்ளது? ஒலிவமலைக்கு அருகாமையில் உள்ளது. இயேசுவானவர் சீஷரில் எத்தனை பேரை நோக்கிச் சொன்னார்? இரண்டு.
2. எந்த கிராமத்துக்குப் போங்கள் என்றார்? உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள் என்றார். போனவுடனே, அங்கே என்ன காண்பீர்கள் என்றார்? அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள் என்றார். அவைகளை என்ன செய்யுங்கள் என்றார்? அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
3. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால் என்ன சொல்ல வேண்டும் என்றார்? இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். உடனே அவன் என்ன செய்வான் என்றார்? உடனே அவைகளை அனுப்பிவிடு வான் என்றார். 
4. உன் ராஜா எப்படி வருகிறார்? சாந்தகுணமுள்ளவராய் வருகிறார். உன் ராஜா எதின்மீது ஏறிக்கொண்டு வருகிறார்? கழுதையின்மேலும் கழுதைக்குட் டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு வருகிறார். உன் ராஜா யாரிடத்தில் வருகிறார்? உன்னிடத்தில் வருகிறார். உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று யாருக்குச் சொல்லுங்கள் என்று எழுதியிருக் கிறது? சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று எழுதியிருக்கிறது.
5. யாரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது? தீர்க்க தரிசியினால்.
6. சீஷர்கள் போய், எதன்படியே செய்தார்கள்? இயேசு தங்களுக்கு கட்டளை யிட்டபடியே செய்தார்கள்.
7. எதைக் கொண்டு வந்தார்கள்? கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்தார்கள். அவைகள் மேல் என்ன போட்டார்கள்? தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள். யாரை ஏற்றினார்கள்? இயேசுவை. 
8. தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தது யார்? திரளான ஜனங்கள். வேறு சிலர் என்ன செய்தார்கள்? மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள், என்னவென்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்? தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத் தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு என்னவென்று விசாரித்தார்கள்? இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11. அதற்கு ஜனங்கள் என்ன சொன்னார்கள்? இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12. இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து என்ன செய்தார்? ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்தார்.
13. என்னுடைய வீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது என்றார்? ஜெபவீடு. நீங்களே என்னுடைய வீட்டை என்னவாக்கினீர்கள்? அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்.
14. தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தது யாவர்? குருடரும் சப்பாணிக ளும். இயேசு அவர்களை என்ன செய்தார்? சொஸ்தமாக்கினார்.
15. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டது என்ன? இயேசு செய்த அதிச யங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப் பரிக்கிற பிள்ளைகளையும் கண்டார்கள். இயேசு செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு என்னவானார் கள்? கோபமடைந்தார்கள்.
16. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கோபமடைந்து இயேசுவை நோக்கி சொன்னது என்ன? இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு என்ன சொன்னார்? ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
17. இயேசு அவர்களை விட்டு எங்கிருந்து புறப்பட்டார்? நகரத்திலிருந்து புறப்பட்டார். எங்கே போனார்? பெத்தானியாவுக்கு. பெத்தானியாவுக்குப் போய் என்ன செய்தார்? இராத்தங்கினார்.
18. காலையிலே இயேசு எங்கே திரும்பி வந்தார்? நகரத்துக்குத் திரும்பிவந் தார். இயேசு நகரத்துக்குத் திரும்பிவருகையில் அவருக்கு என்னவாயிற்று? பசியுண்டாயிற்று.
19. அப்பொழுது இயேசு வழியருகே எதைக் கண்டார்? ஒரு அத்திமரத்தைக் கண்டார். அத்திமரத்தினிடத்திற்குப் போய் கனிகளில்லாமல் இலைகளைக் கண்டதனால் என்ன சொன்னார்? இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார். உடனே அத்திமரம் என்ன ஆனது? பட்டுப்போயிற்று.
20. சீஷர்கள் அதைக் கண்டு, என்னவென்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்? இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21. நீங்கள் சந்தேகப்படாமல் எது உள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத் திற்குச் செய்ததை நீங்கள் செய்யலாம்? விசுவாசம். இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அது என்ன வாகும்? அது அப்படியே ஆகும்.
22. நீங்கள் எது உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்? விசுவாசம் உள்ளவர்களாய்.
23. இயேசு எங்கே வந்து உபதேசம் பண்ணினார்? தேவாலயத்தில் வந்து உப தேசம் பண்ணினார். இயேசு தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து என்ன கேட் டார்கள்? நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகா ரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24. நானும் உங்களிடத்தில் எதைக் கேட்கிறேன் என்றார்? ஒரு காரியத்தை கேட்கிறேன் என்றார். அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நான் எதைச் சொல்லுவேன் என்கிறார்? நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன் என்கிறார்.
25. யார் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண் டாயிற்றோ?  யாரால் உண்டாயிற்று? என்றார்? யோவான். அதற்கு அவர்கள் தேவனால் உண்டாயிற்று என்று சொல்லுவோமானால் இயேசு என்னவென்று நம்மை கேட்பார் என்றார்கள்? பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை.
26. அவர்கள் தங்களுக்குள்ளே என்ன ஆலோசனை பண்ணினார்கள்? மனுஷ ரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகி றோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணினார்கள்.
27. இயேசுவுக்கு என்ன பதில் சொன்னார்கள்? எங்களுக்குத் தெரியாது என்றார் கள். அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
28. ஒரு மனுஷனுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்? இரண்டு. அந்த மனுஷன் மூத்தவனிடத்தில் வந்து என்ன சொன்னான்? மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29. அதற்கு அவன் என்ன சொன்னான்? மாட்டேன் என்றான். பின்பு அவன் என்ன செய்தான்? பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.
30. அந்த மனுஷன் இளையவனிடத்தில் வந்து என்ன சொன்னான்? அப்படியே சொன்னான். (மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய் என்றான்.) இளையவன் என்ன சொன்னான்? போகிறேன் ஐயா என்றான். பின்பு அவன் என்ன செய்தான்? பின்பு அவன் போகிறேன் ஐயா என்று சொல்லி யும் போகவில்லை.
31. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்றார்? மூத்தவன். இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே எதில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல் லுகிறேன் என்றார்? தேவனுடைய ராஜ்யத்தில்.
32. யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை என்ன செய்யவில்லை? விசுவாசிக்கவில்லை. யோவானை விசிவாசித்தவர் கள் யாவர்? ஆயக்காரரும் வேசிகளும். அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் என்ன செய்யவில்லை என்றார்? மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33. வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் எதை உண்டாக்கினான்? ஒரு திராட் சைத் தோட்டத்தை உண்டாக்கினான். திராட்சைத் தோட்டத்தைச் சுற்றிலும் என்ன செய்தான்? வேலியடைத்தான். திராட்சைத் தோட்டத்தில் எதை நாட்டி னான்? ஒரு ஆலையை நாட்டினான். எதையும் கட்டினான்? கோபுரத்தையும் கட்டினான். தோட்டக்காரருக்கு அதை என்னவாக விட்டான்? குத்தகையாக விட்டான். திராட்சத் தோட்டத்தை குத்தகையாகவிட்டு எங்கே போனான்? புறத்தேசத்துக்கு.
34. என்ன காலம சமீபித்தது? கனிகாலம். தன் ஊழியக்காரரை யாரிடத்தில் அனுப்பினான்? தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். எதற்காக அனுப்பினான்? கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி அனுப்பினான்.
35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து என்ன செய்தார்கள்? ஒருவனை அடித்தார்கள், ஒருவனைக் கொலை செய்தார்கள், ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36. பின்னும் அவன் என்ன செய்தான்? முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களை என்ன செய்தார்கள்? அவர்களை யும் அப்படியே செய்தார்கள்.
37. கடைசியில் அவன் யாருக்கு அஞ்சுவார்கள் என்று சொன்னான்? தன் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொன்னான். கடைசியில் அவன் யாரை அவர்களிடத்தில் அனுப்பினான்? தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பி னான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது என்ன சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள் வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
39. தோட்டக்காரர் குமாரனைப் பிடித்து என்ன செய்தார்கள்? திராட்சத்தோட் டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டது யார்? இயேசு.
41. திராட்சத்தோட்டத்தின் எஜமான் வந்து அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான்? அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்துவிடுவார். அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து என்ன செய்வான்? தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்தைக் குத்த கையாகக் கொடுப்பான்.
42. வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் என்ன ஆயிற்று? மூலைக் குத் தலைக்கல்லாயிற்று. அது யாராலே ஆயிற்று? அது கர்த்தராலே ஆயிற்று. அது நம்முடைய கண்களுக்கு எப்படியிருக்கிறது? ஆச்சரியமாயிருக்கிறது. இயேசு இதை நீங்கள் எதில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்? வேதத்தில்
43. தேவனுடைய ராஜ்யம் யாரிடத்திலிருந்து நீக்கப்பட்டு, யாருக்குக் கொடுக் கப்படும்? தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற் கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் என்ன ஆவான்? நொறுங்கிப்போவான். இது எவன்மேல் விழுமோ அவனை என்ன செய்யும்? அவனை நசுக்கிப் போடும்.
45. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்தார்கள்? தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்தார்கள்.
46. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து என்ன செய்ய வகைதேடி னார்கள்? இயேசுவைப் பிடிக்க வகைதேடினார்கள். ஆகிலும் ஜனங்கள் இயே சுவை யாரென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்? தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

No comments:

Post a Comment