Wednesday, April 22, 2015

மத்தேயு – 25

மத்தேயு – 25
1. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? தங்கள் தீவட்டிகளைப் பிடித் துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னி கைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
2. அவர்களில் புத்தியுள்ளவர்கள் எத்தனை பேர்? ஐந்துபேர். அவர்களில் புத்தி யில்லாதவர்கள் எத்தனை பேர்? ஐந்துபேர்.
3. புத்தியில்லாதவர்கள் எவைகளை எடுத்துக்கொண்டுபோனார்கள்? தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். புத்தியில்லாதவர்கள் எதை கூட எடுத்துக்கொண்டு போகவில்லை? எண்ணெயையோ கூடக் கொண்டுபோக வில்லை.
4. புத்தியுள்ளவர்கள் எவைகளை எடுத்துக்கொண்டு போனார்கள்? தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். புத்தியுள்ளவர்கள் எதை கூட எடுத்துக்கொண்டு போனார்கள்? தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கூட எடுத்துக்கொண்டு போனார்கள்.
5. யார் வரத் தாமதமானது? மணவாளன். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் என்னசெய்தார்கள்? நித்திரை மயக்கமடைந்து தூங்கி விட்டார்கள்.
6. நடுராத்திரியிலே என்ன சத்தம் உண்டாயிற்று? இதோ, மணவாளன் வருகி றார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டா யிற்று.
7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் என்ன செய்தார்கள்? அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தி னார்கள்.
8. உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் என்று யார் யாரிடம் சொன்னார்கள்? புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி சொன்னார்கள். உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் என்று ஏன் சொன்னார்கள்? அவர்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதால்.
9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக யாரிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்? விற்கிறவர்களிடத்திற் போய் உங்களுக் காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள்? எங்க ளுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, அப்படிச் சொன்னார்கள்.
10. புத்தியில்லாதவர்கள் எண்ணெய் வாங்கிப்போனபோது வந்தது யார்? மணவாளன். மணவாளனோடுகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தது யார்? ஆயத்தமாயிருந்தவர்கள் (புத்தியுள்ளவர்கள்). கதவு எப்போது அடைக்கப் பட்டது? ஆயத்தமானவர்கள் மணவாளனோடுகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்த பின் கதவு அடைக்கப்பட்டது.
11. ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றது யார்? மற்றக் கன்னிகைகள் (புத்தியில்லாத கன்னிகைகள்)
12. அதற்கு மணவாளன் சொன்னது என்ன? உங்களை அறியேன் என்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13. எதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். எதனால் விழித்திருங்கள் என்கிறார்? மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்கிறார்.
14. புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஆஸ்தி களை யாரை அழைத்து ஒப்புக்கொடுக்கிறான்? தன் ஊழியக்காரரை அழைத்து ஒப்புக்கொடுக்கிறான். பரலோகராஜ்யம் யார் யாருக்கு எதை ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது? பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
15. எதற்குத் தக்கதாக ஒவ்வொருவனிடத்தில் தாலந்துகளைக் கொடுத்துப் பிரயாணப்பட்டுப் போனான்? அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக. அவர்க ளுடைய திறமைக்குத் தக்கதாக அவர்களுக்கு எத்தனை தாலந்துகளைக் கொடுத்தான்? ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், ஒருவனுக்கு இரண்டு தாலந்தும், ஒருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்தான்.
16. ஐந்து தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? ஐந்து தாலந்தை வாங்கி னவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந் தைச் சம்பாதித்தான்.
17. இரண்டு தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? ஒரு தாலந்தை வாங்கின வனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
19. அந்த ஊழியக்காரருடைய எஜமான் எப்போது திரும்பிவந்தான்? வெகுகால மானபின்பு. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து, அவர்களிடத்தில் என்ன கேட்டான்? கணக்குக் கேட்டான்.
20. ஐந்து தாலந்தை வாங்கினவன் என்ன சொன்னான்? வேறு ஐந்து தாலந் தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித் தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21. கொஞ்சத்தில் உண்மையாயிருந்தவன் யார்? உத்தமமும் உண்மையு முள்ள ஊழியக்காரன். கொஞ்சத்தில் உண்மையாயிருந்ததினால் அவனை அவன் எஜமான் என்ன செய்தான்? அநேகத்தின்மேல் அதிகாரியாக வைத்தான். ஐந்து தாலந்து வாங்கி வேறு ஐந்து தாலந்து சம்பாதித்தவனை நோக்கி எஜமான் சொன்னது என்ன? உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரி யாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை வாங்கினவன் என்ன சொன்னான்? ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23. இரண்டு தாலந்து வாங்கி வேறு இரண்டு தாலந்து சம்பாதித்தவனை நோக்கி எஜமான் சொன்னது என்ன? உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக் காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்து வாங்கினவன் ஆண்டவனை நீர் யார் என்று அறிவேன் என்றான்? ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக் காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன் என்றான்.
25. ஒரு தாலந்து வாங்கினவன் எதனால் பயந்து போனேன் என்றான்? ஆண்ட வனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க் கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன், அதனால் பயந்து போனேன் என்றான். எதனால்; உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத் தேன் என்றான்? பயந்து போய் நிலத்தில் புதைத்து வைத்தேன் என்கிறான். எதை வாங்கிக்கொள்ளும் என்கிறான்? உம்முடையதை (ஒரு தாலந்து). 
26. பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரன் யார்? ஒரு தாலந்து வாங்கி அதை நிலத்தில் புதைத்து அதை அப்படியே திரும்ப எடுத்து எஜமானி டம் கொடுத்தவன்.
27. ஒரு தாலந்து வாங்கி அதையே திருப்பி கொடுத்தவனை நோக்கி எஜமான் எதை அறிந்திருக்கிறாயே என்றான்? நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவ னென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே என்றான். அப்படியானால், நீ அதை யார் வசத்தில் போட்டுவைத்திருக்க வேண் டும் என்றான்? காசுக்காரர் வசத்தில்.  அப்பொழுது, நான் வந்து என்ன செய்தி ருப்பேன் என்றான்? என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே என்றான்.
28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து யாரிடம் கொடுங்கள் என்றான்? பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள் என்றார்.
29. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப் படும். யார் பரிபூரணமும் அடைவான்? உள்ளவன். யாரிடத்திலிருந்து உள்ள தும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்.
30. யாரைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள் என்றான்? பிரயோஜன மற்ற ஊழியக்காரனை. புறம்பான இருளிலே என்ன உண்டாயிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும்.
31. மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோ டுங்கூட வரும்போது, எதின்மேல் வீற்றிருப்பார்? தமது மகிமையுள்ள சிங்காச னத்தின் மேல் வீற்றிருப்பார்.
32. எப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்? மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங் கூட வந்து, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும்போது. மனுஷகுமாரன் சகல ஜனங்களையும் எப்படிப் பிரிப்பார்? மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்.
33. செம்மறியாடுகளை எந்தப் பக்கத்தில் நிறுத்துவார்? தமது வலதுபக்கத்தில் நிறுத்துவார். வெள்ளாடுகளை எந்தப் பக்கத்தில் நிறுத்துவார்? தமது இடதுபக் கத்தில் நிறுத்துவார்.
34. யாரைப் பார்த்து என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்பார்? ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து. எப்படிப்பட்ட ராஜ்யத் தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார்? உலகம் உண்டானது முதல் உங்க ளுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள் ளுங்கள் என்பார்.
35. பசியாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்குப் போஜனங்கொடுத் தீர்கள். தாகமாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? என் தாகத்தைத் தீர்த் தீர்கள். அந்நியனாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்.
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள் என்பார்? என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலில் இருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள் என்பார்? என்னைப் பார்க்க வந்தீர்கள்.
37. அப்பொழுது அவனுக்கு பிரதியுத்தரமாக சொன்னது யார்? நீதிமான்கள். நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? ஆண்டவரே, நாங்கள் எப்பொ ழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த் தோம்?
38. பின்னும் நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 
39. பின்னும் நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத் தில் வந்தோம் என்பார்கள். 
40. நீங்கள் எதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்? மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41. ராஜா யாரைப் பார்த்து சபிக்கப்பட்டவர்களே என்பார்? அப்பொழுது, இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து. சபிக்கப்பட்டவர்களை எங்கே போங்கள் என்பார்? என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 
42. பசியாயிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? எனக்குப் போஜ னங் கொடுக்கவில்லை என்பார். தாகமாயிருந்தேன், நீங்கள் என்ன செய்ய வில்லை என்பார்? என் தாகத்தைத் தீர்க்கவில்லை என்பார்.
43. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பார். வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை என்பார். வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
44. அப்பொழுது இடதுபக்கத்தில் நின்றவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக என்னவென்று சொல்லுவார்கள்? ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப் பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. மனுஷகுமாரன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொலலுவது என்ன? மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதி ருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. யார் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்றார்? இடதுபக்கத்தில் நிற்பவர்கள். யார் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றார்? வலதுபக்கத்தில் நிற்பவர்கள் (நீதிமான்கள்).

No comments:

Post a Comment