Saturday, April 11, 2015

மத்தேயு – 20

மத்தேயு – 20
1. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் வீட்டெஜ மானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் எதற்காக அதிகாலை யிலே புறப்பட்டான்? அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
2. அவன் வேலையாட்களுடன் நாளொன்றுக்கு எத்தனை பணம் கூலிபேசி னான்? ஒரு பணம். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒருபணம் கூலிபேசி அவர்களை எங்கே அனுப்பினான்? தன் திராட்சைத்தோட்டத்துக்கு அனுப்பி னான்.
3. மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய் என்ன செய்தான்? கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டான்.
4. மூன்றாம் மணிவேளையிலும அவன் புறப்பட்டுப்போய் சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு என்ன சொன்னான்? நீங்களும் திராட்சத்தோட்டத்திற் குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களும் திராட்சைத்தோட்டத்துக்குப் போனார்கள்.
5. மறுபடியும் எந்த மணிவேளைகளிலெல்லாம் அவன் புறப்பட்டுப்போய் அப்படியே செய்தான்? ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
6. பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு என்ன கேட்டான்? நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். நீங்களும் திராட்சத்தோட்டத் துக்குப் போங்கள், நீங்களும் எதன்படி கூலி பெற்றுக் கொள்வீர்கள் என்றான்? நியாயமானபடி கூலி பெற்றுக் கொள்வீர்கள் என்றான்.
8. சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி சொன்னது என்ன? நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
9. அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து என்ன கூலி  வாங்கினார்கள்? ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார் கள்.
10. முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு என்ன கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள்? அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள். அவர்களும் என்ன கூலி வாங்கினார்கள்? அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
11. முந்தி வந்தவர்கள் ஆளுக்கொரு பணம் வாங்கிக்கொண்டு யாரை நோக்கி னார்கள்? வீட்டெஜமானை நோக்கினார்கள். 
12. பிந்திவந்தவர்களாகிய இவர்கள் எத்தனை மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்? ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள். பகலின் கஷ்டத் தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு யாரை சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்? பிந்திவந்து ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்த இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு என்ன செய்யவில்லை என்றான்? அநியாயஞ்செய்யவில்லை என்றான். நீ என்னிடத்தில் எதற்கு சம்மதிக்கவில்லையா என்றான்? ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா என்றான்.
14. எதை நீ வாங்கிக்கொண்டு போ என்றான்? உன்னுடையதை நீ வாங்கிக் கொண்டு போ என்றான். எது என்னுடைய இஷ்டம் என்றான்? உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என் இஷ்டம் என்றான்.
15. எதைச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா என்றான்? என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா என்றான். நான் தயாளனாயி ருக்கிறபடியால் நீ யாராயிருக்கலாமா என்றான்? வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
16. பிந்தினோர் யாராயிருப்பார்கள்? பிந்தினோர் முந்தினோராயிருப்பார்கள். முந்தினோர் யாராயிருப்பார்கள்? முந்தினோர் பிந்தினோராயிருப்பார்கள். அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்? தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்.
17. இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே யாரை தனியே அழைத் தார்? பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்தார்.
18. இதோ எங்கே போகிறோம் என்றார்? இதோ எருசலேமுக்குப் போகிறோம் என்றார். யார் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்? மனுஷகுமாரன். அவர்கள் மனுஷகுமாரனை எதனால் தீர்த்துவிடுவார்கள்? மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துவிடுவார்கள்.
19. அவர்கள் மனுஷகுமாரனை எப்படி ஒப்புக்கொடுப்பார்கள்? அவர்கள் மனுஷகுமாரனை பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் மனுஷகுமாரனை யாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்? புறஜாதியாரிடத்தில். ஆகிலும் எந்த நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்? மூன்றாம் நாளில்.
20. அப்பொழுது, யாருடைய குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரி டத்தில் வந்தாள்? செபெதேயுவின் குமாரருடைய தாய். செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து என்ன செய்தாள்? அவரைப் பணிந்து கொண்டாள். அவரைப் பணிந்து கொண்டு என்ன சொன்னாள்? உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. இயேசு அவளிடம் என்ன கேட்டார்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் என்ன சொன்னாள்? உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்ய வேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? கூடும் என்றார்கள்.
23. எதில் நீங்கள் குடிப்பீர்கள்? என் பாத்திரத்தில்; நீங்கள் குடிப்பீர்கள். எதை நீங்கள் பெறுவீர்கள்? நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக் கும்படி யாரால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக் கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்? என் பிதாவினால்.
24. யார் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்? மற்றப் பத்துப்பேரும்.
25. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து எதை நீங்கள் அறிந்தி ருக்கிறீர்கள் என்றார்? புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப் பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகா ரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
26. உங்களுக்குள்ளே எப்படி இருக்கலாகாது என்றார்? இறுமாப்பாய் ஆளுவ தும், கடினமாய் அதிகாரஞ் செலுத்துவதுமாயிருக்கலாகாது என்றார். உங்க ளில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் எப்படி இருக்க வேண்டும்? உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்க வேண்டும்.
27. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் எப்படி இருக்க வேண்டும்? அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்க வேண்டும்.
28. மனுஷகுமாரன் எதைக் கொள்ளும்படி வரவில்லை? மனுஷகுமாரன் ஊழியங் கொள்ளும்படி வரவில்லை. மனுஷகுமாரன் எதைச் செய்யும்படி வந்தார்? மனுஷகுமாரன் ஊழியஞ் செய்யும்படி வந்தார்.
29. யாரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்? அநேகரை. அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில் அவருக்குப் பின்சென்றது யார்? திரளான ஜனங்கள்.
30. அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்தவர்கள் யார்? குருடர். எத்தனை பேர்? இரண்டு பேர். இரண்டு குருடர் யார் அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டார்கள்? இயேசு. இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு என்னவென்று கூப்பிட்டார்கள்? ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
31. என்னவென்று ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள்? அவர்கள் பேசாதி ருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டியும் அவர்கள் எப்படி கூப்பிட்டார்கள்? ஆண்ட வரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட் டார்கள்.
32. இயேசு நின்று, யாரைத் தம்மிடத்தில் அழைத்தார்? இரண்டு குருடரை. இயேசு இரண்டு குருடரையும் தம்மிடத்தில் அழைத்து என்ன கேட்டார்? நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
33. அதற்கு குருடர்கள் சொன்னது என்ன? ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
34. இயேசு என்ன செய்தார்? இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட் டார். இயேசு அவர்கள் கண்களைத் தொட்டவுடன் என்ன ஆனார்கள்? உடனே அவர்கள் பார்வையடைந்து அவருக்குப் பின்சென்றார்கள்.

No comments:

Post a Comment