மத்தேயு – 24
1. இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் எதற்கு அவரிடத்தில் வந்தார்கள்? தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2. இயேசு அவர்களை நோக்கி: எவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே என்றார்? தேவாலயத்தின் கட்டடங்களையெல்லாம் பார்க்கிறீர்களே என்றார். எவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப் பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தேவாலயத்தில்.
3. பின்பு, அவர் எதின்மேல் உட்கார்ந்திருந்தார்? ஒலிவமலையின்மேல். சீஷர் கள் இயேசுவிடத்தில் தனித்துவந்து என்ன கேட்டார்கள்? இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடை யாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
4. யார் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? ஒருவனும்.
5. அநேகர் வந்து எப்படி வஞ்சிப்பார்கள் என்றார்? அநேகர் வந்து, என் நாமத் தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப் பார்கள் என்றார்.
6. எவைகளையும் அவைகளின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்? யுத் தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். எப்போது கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? யுத்தங்களையும் யுத்தங்க ளின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாயி ருங்கள் என்றார். எவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே? யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும். ஆனாலும் எது உடனே வராது? முடிவு.
7. எதுக்கு விரோதமாய் எது எழும்பும்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். எவைகள் பல இடங்களில் உண்டாகும்? பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. எவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. இவைகளெல்லாம் நடக்கும்போது உங்களை எதற்கு ஒப்புக்கொடுப்பார் கள்? உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் என்ன செய்யப்படுவீர்கள்? பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் என்ன செய்வார்கள்? அநேகர் இடறலடைந்து, ஒருவ ரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. யார் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்? அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள்.
12. எதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்? அக்கிரமம் மிகுதியாவதி னால்.
13. யார் இரட்சிக்கப்படுவான்? முடிவுபரியந்தம் நிலைநிற்பவன்.
14. எப்போது முடிவு வரும்? ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோக மெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்போது முடிவு வரும்.
15. எதைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான்? பாழாக்கு கிற அருவருப்பைக் குறித்து. யார் சிந்திக்கக்கடவன்? வாசிக்கிறவன் சிந்திக் கக்கடவன்.
16. யார் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்? யூதாவில் இருக்கிறவர்கள். எப்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர் கள்? நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது.
17. வீட்டின்மேல் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வீட்டிலே எதை யாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்க வேண்டும்.
18. வயலில் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்க வேண்டும்.
19. அந்நாட்களில் யாருக்கெல்லாம் ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கி றவர்களுக்கும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது எந்த காலத்திலாவது, எந்த நாளிலாவது, சம்பவியாத படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்? நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21. எப்படிப்பட்ட உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்? உலகமுண்டா னதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாதது மான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள் என்ன செய்யப் படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவ தில்லை? குறைக்கப்படாதிருந்தால். யார் நிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப் படும்? தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தம்.
23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கி றார் என்று எவனாகிலும் சொன்னால் என்ன செய்யாதேயுங்கள் என்கிறார்? நம்பாதேயுங்கள் என்கிறார்.
24. ஏனெனில் யார் எழும்புவார்கள்? கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரி சிகளும் எழும்புவார்கள். கூடுமானால் யாரை வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்? தெரிந்துகொள்ளப் பட்டவர்களை.
25. இதோ, முன்னதாக உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன்? அறிவித்திருக் கிறேன்.
26. அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், என்ன செய்யாதிருங்கள்? புறப்படாதிருங்கள். இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் என்ன செய்யாதிருங்கள்? நம்பாதிருங்கள்.
27. எதைப்போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்? மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல.
28. எங்கே கழுகுகள் வந்து கூடும்? பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சூரியன் என்னவாகும்? அந்தகா ரப்படும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சந்திரன் என்னவாகும்? ஒளியைக் கொடாதிருக்கும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே நட்சத் திரங்கள் என்னவாகும்? வானத்திலிருந்து விழும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே வானத்தின் சத்துவங்கள் என்னவாகும்? அசைக்கப்படும்.
30. அப்பொழுது வானத்தில் என்ன காணப்படும்? மனுஷகுமாரனுடைய அடையாளம். மனுஷகுமாரன் எப்படி வானத்தின் மேகங்கள்மேல் வருவார்? வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும். மனுஷகுமாரன் வல்லமையோ டும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியி லுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு என்ன செய்வார்கள்? புலம்புவார்கள்.
31. எப்படிப்பட்ட சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்? வலு வாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே. அவருடைய தூதர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை என்ன செய்வார்கள்? வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப் பார்கள்.
32. எதினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்? அத்திமரத் தினால். வசந்தகாலம் எப்பொழுது சமீபமாயிற்று என்று அறிவீர்கள்? அத்தி மரத்திலே இளங்கிளை தோன்pற துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமா யிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, யார் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்? (மனுஷகுமாரன்) அவர்.
34. இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே எது ஒழிந்துபோகாதென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
35. எவைகள் ஒளிந்துபோம்? வானமும் பூமியும். எவைகள் ஒழிந்துபோவ தில்லை? என் வார்த்தைகள்.
36. அந்த நாளையும் அந்த நாழிகையையும் யார் ஒருவர்தவிர மற்றொருவ னும் அறியான்? என் பிதாதவிர மற்றொருவனும் அறியான். வேறு யாரும் அறியார்கள்? பரலோகத்திலிருக்கிற தூதர்களும் அறியார்கள்.
37. மனுஷகுமாரன் வரும் காலத்திலும் எப்படி நடக்கும்? நோவாவின் காலத் தில் நடந்ததைப்போல நடக்கும்.
38. ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவே சிக்கும் நாள் வரைக்கும் என்ன நடந்தது? ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்.
39. எதுவரை உணராதிருந்தார்கள்? ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். மனுஷகுமாரன் வரும் காலத்திலும் எப்படி நடக்கும்? நோவாவின் காலத்தில் நடந்தது போல நடக்கும்.
40. அப்பொழுது வயலில் எத்தனை பேர் இருப்பார்கள்? இரண்டுபேர். இரண்டு பேரும் என்ன ஆவார்கள்? ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றொருவன் கைவிடப்படுவான்.
41. எத்தனை ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்? இரண்டுபேர். இரண்டு பேரும் என்ன ஆவார்கள்? ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள். மற்றொ ருத்தி கைவிடப்படுவாள்.
42. எதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகை யிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். எதற்காக உங்களை விழித்திருங்கள் என்கிறார்? உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவா ரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந் தால், அவன் என்ன செய்வான்? அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிட வொட்டான்.
44. எந்த நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்? நீங்கள் நினையாத நாழி கையிலே. எதனால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்கிறார்? நீங்கள் நினை யாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரவிருப்பதால் ஆயத்தமாயிருங்கள்.
45. யாரை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யாவன்? ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜ னங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
46. எப்படிப்பட்ட ஊழியக்காரன் பாக்கியவான் என்கிறார்? தன் எஜமான் வரும் போது ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் பாக்கியவான் என்கிறார்.
47. அப்படிப்பட்ட ஊழியக்காரனை எஜமான் என்ன செய்வான்? தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான்.
48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்தால் தன் உள்ளத்திலே என்ன சொல்லுவான்? என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத் திலே சொல்லுவான்.
49. தன் உடன் வேலைக்காரரை என்ன செய்வான்? அடிக்கத் தொடங்குவான். வெறியரோடே என்ன செய்வான்? புசிக்கவும் குடிக்கவும் தலைப்படுவான்.
50. அவனுடைய எஜமான் எப்பொழுது வருவான்? அந்த ஊழியக்காரன் நினை யாத நாளிலும், அறியாத நாழிகையிலும் வருவான்.
51. அவனுடைய எஜமான் வந்து, என்ன செய்வான்? அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். அங்கே என்ன உண்டாயிருக்கும்? அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
No comments:
Post a Comment